கலித்தொகை
விளம் விளம் மா மா மா
இருசெவி குறுக்கிட யிருக ரத்தால் பிடித்து
ஒருமுகப் படுத்தியே உள்ளுள் மூச்சை நிறுத்து.
ஒருமுறை இருமுறை பலவாய் எழுவா யமர்ந்தே
வருமுனக் கேகண நாதன் தோப்புக் கரணம்.
பொருள்:
இரு காதுகளையும் இரு கரங்களால் குறுக்கே பிடித்து, மூச்சை இழுத்து மனதை ஒருமுகப் படுத்தி ஒருமுறை அல்ல பலமுறை எழுந்து அமர்ந்து செய்தால் உனக்கு கணபதிக்கு தோப்புக்கரணம் செய்ய வரும்.
No comments:
Post a Comment