Saturday 10 September 2016

சிவதாண்டவம்






 விளம் விளம் மா விளம் விளம்( சார விந்தம் என்பது இந்த சந்தத்தின் பெயர்)

வண்டமர் பூங்குழல் வாசன் வெள்ளியங் கிரியினன்
தண்டையொ லிக்கவே வண்டார் குழலியு மிடப்புறம்
செண்டைமே ளமொலியில் சேர்ந்தே திருநட னம்செய
கண்களும் காணவே செய்த பாக்கியம் என்னவோ?

பொருள்:
            வண்டுகள் அமரும் பூக்கள்( வண்டுகள் நறுமணமுடைய பூக்களில் அமரும் என்பது உட்குறிப்பு)  அணிந்த குழலுடைய ஈசன் வெள்ளியங்கிரியில் குடிகொண்டிருப்பவன் தன் இடப்புறம் தண்டையொலித்து நடந்து வரும் வண்டார்குழலியாகிய உமையை கொண்டு செண்டை மேளங்கள் ஒலிக்க நடனமாடுகிறான். அத்தகைய நடனத்தை நாம் காண நம் கண்கள் என்ன பாக்கியம் செய்தது?

No comments:

Post a Comment